தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இபிஎஸ் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த அவர் தெருதெருவாகச் சென்று உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். திமுகவிற்கு எதிராகவே முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு போட்டியாக இபிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.