சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.