பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார்.

அவர் சார்பாக புகழேந்தி இந்த மனுவை அளித்தார். EPS தன்னை பொது செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.