விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.