தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வடக்கர்களை காரணம் என சீமான் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு பொதுக்குழு மேடையில் வட இந்தியர்களை பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவர் பேசியதாவது, வட இந்தியர்களும் தமிழர்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

நாம் தமிழர் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஹிந்திகாரர்களை அடித்து வெளுத்து விரட்டுவேன். அதன்பிறகு ஹிந்தி காரர்கள் மீது கஞ்சா வழக்கு, கற்பழிப்பு வழக்கு போட்டு அவர்களை உள்ளே தள்ளி சோறு போட மாட்டேன். இதை பார்த்து பயந்து போய் ஹிந்தி காரர்கள் ஓடி விடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் சீமானின் பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.