திமுக கிழக்கு தொகுதி 39-வது வார்டில் 214 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்பியுமான கனிமொழி உறுப்பினர் அட்டை வழங்கினார். அதன் பிறகு கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, வடக்கில் இருந்து வரும் மாற்று சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. அந்த ஒரு காரணத்திற்காகவே ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார்கள். மேலும் வெற்றியை உறுதி செய்வதற்காகவே திமுக அமைச்சர்கள் இங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.