ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வா.க நகர தலைவர் பர்கத், நிர்வாகி பொன்வண்ணனை  மர்மக் கும்பல்  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரசியல் கொலையா அல்லது முன் பகையா என்று பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.