தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாகவும் தென் சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்க கட்டணம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.