சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கு மனநிலை சரி இல்லாததால் மகிழ் ஷீலா இவரை கவனித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இவர்கள் வீடு பூட்டி கிடந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து உடனே தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது ஷீலா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தாயார் ஜாஸ்மின் தன்மகள் இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் அவருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.