ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து விண்ணப்பங்கள் பெற வேண்டும், உரிய நேரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.