NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால் பல இடங்களில் ஆங்கங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.