தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2021 தேர்தலில் ஓபிஎஸ்-உம், 2019 தேர்தலில் ரவீந்திரநாத்தும் தவறான தகவல் அளித்திருந்ததாக வாக்காளர் மிலானி வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த இரு மனுக்களையும் ஐகோர்ட் சற்றுமுன் தள்ளுபடி செய்தது.