கூட்டணி குறித்து முடிவு எடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா, கூட்டணி குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த கட்சியுடனும் பேசவில்லை. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.