நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தார் அண்ணாமலை.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தேர்தல் மேலாண்மை குழு, தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்தார் அண்ணாமலை. மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க எச். ராஜா, கேபி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்ற பத்திரிக்கை தயாரிப்பதற்காக பாஜக மாநில செயலாளர்கள் எஸ்.ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது

https://twitter.com/BJP4TamilNadu/status/1754383098404536669

https://twitter.com/BJP4TamilNadu/status/1754383102699606234