புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியை கண்டித்து திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.