கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் சிலிண்டர் பெறுவதாக மத்திய அரசு கூறுகிறது.