நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது சீட் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது