டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கே.சி.ஆர் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். கவிதா தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய நிலையில் கவிதாவை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தினர். கே.சி.ஆர் மகள் கவிதாவின் கவிதை கண்டித்து ஹைதராபாத்தில் அவர் வீட்டின் முன்பு பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.