மம்தாவை யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக வெளியான செய்திகளை திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மறுத்துள்ளது. தலையில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, யாரோ தள்ளிவிட்டிருக்கலாம் என தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள டிஎம்சி மூத்த தலைவர் சசி பாஞ்சி, “மயங்கி கீழே விழுந்ததில்தான், காயம் ஏற்பட்டுள்ளது. அவரை யாரும் பின்னால் இருந்து தள்ளிவிடவில்லை” எனக் கூறியுள்ளார்