திமுக தலைமை கட்சி நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இருவரையும் நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.