உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை திடீரென்று காவல் தலைமையக ஏடிஜிபி-யாக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆணையராக டேவிட்சன் இருந்த போது, அவரது மனைவி நடத்திய டிராவல்ஸ் ஏஜென்சியில் போலி பாஸ்போர்ட் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.