ரூ. 100க்கு விற்பனையான தக்காளி அரசு நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இன்று மொத்தவிலை கிலோ ரூ.50க்கும், சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.60க்கும் விற்கப்படுகிறது. அரசு பசுமை பண்ணைகளில் நேற்று கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் குறைந்துள்ளது. இதனால் குடும்ப பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.