இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்பதால் முதியோர்,கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெளியே வர வேண்டாம். மேலும் இளநீர், மோர் மற்றும் தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.