தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று விடுப்பில் சென்றவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள், வார விடுமுறையில் சென்றவர்கள் என இவர்களை வைத்து தமிழகத்தில் ஓரளவு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது நாளான இன்று தலைகீழாக மாறி தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.