தமிழகத்தில் சிவில் தொடர்பான பிரச்சனைகளை போலீசார் தேவை இன்றி விசாரிக்க கூடாது என்று ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். பண தகராறு மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் CSR, FIR மற்றும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த மனுக்கள் மீதும் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் முறையாக அனுமதி பெற்று புகார்களை  விசாரிக்கலாம் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.