தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி (தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுக்கா) உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.