சென்னையில் எட்டு ஆவின் மையங்களில் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பால் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிய நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் பால் தட்டுப்பாட்டை தவிர்க்க சென்னையில் அம்பத்தூர், மாதாவரம், அண்ணா நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்