தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி 100% முகக்கவசம் கட்டாயம் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

திரையரங்கு மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம் என உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இனி முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறையும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.