6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு தேதியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக வெளியிட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஏப்.11-24 வரையும், மதுரையில் ஏப்.21 – 28 வரையும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறுகிறது.

இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்வு அட்டவணை மாறுகிறது. எனவே, தேர்வு தொடர்பாக பள்ளியில் தெளிவாக மாணவர்கள் கேட்டுக் கொள்ளவும். தேர்வு முடிந்து ஏப்.25ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.