கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். கதவணையை  சுற்றி பார்க்க வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகளை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 4 மாணவிகளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவரது உடலும் மீட்கப்பட்டது. அதாவது, தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வந்த புதுக்கோட்டையை  சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் 4 பேர் பலியாகி உள்ளனர்..