கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகளை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர்.