சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, தி நகர், அசோக் நகர் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்வதால் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.