மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்   தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 8, 18, 22 தேதிகளில் நெல்லை நோக்கி புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்றடையும். நவம்பர் 9,16,23 தேதிகளில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரம், திருச்சி, மதுரை வழியாக இந்த ரயில் செல்லும்