தமிழகத்தில் நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் நிகழ்க கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் நவம்பர் 14 முதல் நவம்பர் 17ஆம் தேதி வரையும், மாநில அளவில் நவம்பர் 22 முதல் நவம்பர் 25ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.