2021 தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்., வேட்பாளர் பழனி நாடார் மிக குறைந்த வாக்கில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளை எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி தபால் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஒருவேளை தபால் வாக்கில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், காங்., வேட்பாளர் வெற்றி செல்லாது என அறிவிக்கப்படும்…