செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு விரைவில் 625 பேர் விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனராக நியமனம் செய்யப்பட உள்ளார்கள். புதிய நியமனத்திற்கு இணைய வழியாக விண்ணப்பம் பெறப்பப்படுகிறது. இதற்கான இணையதளமும் உருவாக்கப்படுகிறது.

ஓரிரு வாரத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்திற்கு தமிழகத்திற்கு புதிதாக 4,200 பேருந்துகள் வாங்கப்படும் இதற்கான அடுத்தடுத்து டெண்டர் வெளியிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்