தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவு செய்வதற்கு பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கிடையில் 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று தொடங்கியதால் இந்த முறையை தமிழக அரசு மீண்டும் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் மூன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்குள் வருவதை சென்னையில் இருந்தபடியே கண்காணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.