ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு வேனில் திரும்பியபோது கே.வி.பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.