தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.