சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து சிறையில் இருந்து வந்த கஜா என்ற கஜேந்திரன் மன உளைச்சலின் காரணமாக சிறையில் இருக்கக்கூடிய கழிவறையில் துண்டை மாட்டி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மற்ற கைதி மூலமாக  தகவல் அறிந்து உள்ளே சென்று பார்த்த காவல்துறையினர் அவர் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது உறுதி செய்த பிறகு அவர் உடலானது பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? எதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் ? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்பது தொடர்பாக புழல் காவல் ஆய்வாளர் மல்லிகா விசாரணையை மேற்கொண்டு வருகிறார். சிறையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.