சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சாலையில் சினிமா துணை நடிகர் பழனியப்பன் குடிபோதையில் காரை வேகமாக போட்டி வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துணை நடிகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.