நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது குளிர்சாதன ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதனைப் போலவே ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அந்த வசதி கிடைக்கும் வகையில் ” இ-பெட் ரோல்”என்ற திட்டம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் திருவனந்தபுரத்தில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் நடைமுறைக்கு வந்து இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.