திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை காந்தி நகரில் விஜயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூரில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நேற்று மதியம் விஜயராமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராமனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.