புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம் காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.