புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லக்கனாப்பட்டியில் பாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு இன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உறவினரை அழைப்பதற்காக பாண்டி மோட்டார் சைக்கிளில் கீழக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.