நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கிரீன் பீல்ட் பகுதியில் 31 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் டெலிகிராம் செயலியில் ஒரு லிங்க் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்புலாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பிய பெண் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தார். அதன் பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பணமும் கிடைக்கவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்தபின் ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.