தர்மபுரி மாவட்டத்திலுள்ள கேரகோடஅள்ளி கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது விவசாய நிலத்திற்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இதனை மணிமேகலையின் உறவினர் பெருமாள் தட்டி கேட்டு மோட்டார் சுவிட்சை ஆப் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மணிமேகலை பெருமாளின் மகள் தீபிகாவிடம் தெரிவித்தார்.

உடனே தீபிகா தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என கூறி தனது தந்தையை கண்டித்தார். இதனால் கோபமடைந்த பெருமாள் மணிமேகலையை தாக்கியுள்ளார். இதுகுறித்து மணிமேகலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.