திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷுக்கு சௌந்தர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் இருந்த சௌந்தர்யா கடந்த 14-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.