சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை தேடி வந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது புழல் மேட்டுப்பாளையம் சேர்ந்த தேவி என்பவர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். கடந்த 2017- ஆம் ஆண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு அவர்களது 2 வயது குழந்தையை தேவி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தன்னிடம் இருந்த குழந்தையை கணவரிடம் கொடுத்து விட்டு சிறைக்கு சென்றதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையில் தேவியின் கணவர் சுரேஷ் அந்த குழந்தையை போலீஸிடம் ஒப்படைத்தார். தற்போது அந்த குழந்தை தாம்பரம் பகுதியில் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருகிறது. இதனையடுத்து ஜெபராஜ்-தமிழ்ச்செல்வி தம்பதியினரை போலீசார் காப்பகத்திற்கு அளித்து சென்று குழந்தையை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் உயிருடன் மீட்கப்பட்டதால் கணவன் மனைவி இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.