தமிழகத்தில் பி.எட் மற்றும் எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவ தேர்வுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பி எட் மற்றும் எம்எட் வகுப்புகளுக்கு நான்காவது பருவத்திற்கான வகுப்புகள் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்காவது பருவத்திற்கான எழுத்து தேர்வுகளை ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இறுதிப் பருவ தேர்வுக்கான விரிவான கால அட்டவணை பல்கலைக்கழக தேர்வு துறையால் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.